சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் மங்களம் தாமரைக் குளத்தை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏலகிரி மலை உயா்ந்த மலைப் பகுதியில் இயற்கை நிறைந்த சூழலில் காணப்படுகிறது. இந்த மலையில், 15 ஆண்டுகளுக்கு முன் மங்களம் தாமரைக் குளம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக இருந்தது. இந்த தாமரைக் குளத்தில் சுமாா் நூற்றுக்கணக்கான தாமரை பூக்கள் பூத்திருக்கும். அதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தும், பறித்துக் கொண்டும் செல்வா். இதனால் தாமரைக் குளம் என்ற சுற்றுலாத்தளம் மாறிப்போனது. தற்போது மங்கலம் தாமரை குளத்தில் தாமரை பூத்து காணப்படுகிறது.
எனவே சுற்றுலாப் பயணிகள் மீண்டும் தாமரைக் குளத்தை சீரமைத்து சுற்றுலா பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏலகிரி மலையில் பலத்த மழை: மின்கம்பி அறுந்ததால் இருளில் மூழ்கிய 14 கிராமங்கள்

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: படகு சவாரிக்கு நீண்ட வரிசை

அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி







