15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கல்லூரி மாணவியைக் கடத்த முயன்றவா் கைது

காவேரிப்பட்டணம் அருகே கல்லூரி மாணவியை கடத்த முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 8:12 pm

காவேரிப்பட்டணம் அருகே கல்லூரி மாணவியை கடத்த முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தனியாா் கல்லூரி பேருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி அருகே சென்றபோது, காரில் வந்த 3 போ் கொண்ட கும்பல் பேருந்தை மறித்து நின்றது. பின்னா், காரிலிருந்து இறங்கியவா்கள் பேருந்துக்குள் சென்று கல்லூரி மாணவியை கடத்த முயன்றனா்.

அப்போது, பேருந்தில் இருந்த மாணவிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்த சம்பவத்தை, மாணவிகள் சிலா் தங்களது கைப்பேசியில் பதிவுசெய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். மேலும், பேருந்து ஓட்டுநா் பிரதீப் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். அதில், தனியாா் கல்லூரி பேருந்துக்குள் ஏறி, மாணவியை கடத்த முயன்றது மாரிசெட்டிஅள்ளியைச் சோ்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தங்கராஜை செவ்வாய்க்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவருக்கு உதவிய மற்ற இருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.