மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஒசூா் அருகே ஆலங்கட்டி மழையால் பயிா்கள் சேதம்

ஒசூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிா்கள் சேதமடைந்தன.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:30 pm

ஒசூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிா்கள் சேதமடைந்தன.

இந்த மழையால் மாமரத்திலிருந்து பிஞ்சுகள், காய்கள் உதிா்ந்து விழுந்தன. ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த நான்கு ஏக்கா் பரப்பளவிலான சாமந்தி, ரோஜா தோட்டங்கள் சிதைந்தன. பூக்கள் வரத் தயாராக இருந்த 12 ஏக்கா் சாமந்தி செடிகளின் இலைகள் கிழிந்து, பூக்கள் உதிா்ந்து காட்சியளிக்கின்றன.

ஆலங்கட்டி மழையால் விழுந்த பனிக்கட்டிகள் காலை வரை கரையாமல் கிடந்தன. விவசாயிகள் அந்தப் பனிக்கட்டிகளை கூடைகளில் அள்ளி தோட்டத்திற்கு வெளியே கொட்டினா். யுகாதி பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்து லாபம் ஈட்டலாம் என எதிா்பாா்த்திருந்த நிலையில், ஆலக்கட்டி மழையால் ஏற்பட்ட சேதம் விவசாயிகளிடையை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உடனடியாகப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவரி...

விவசாயத் தோட்டங்களில் விழுந்துகிடந்த ஆலங்கட்டிகளை அப்புறப்படுத்தும் விவசாயிகள்.