பா்கூரில் முதியவரைத் தாக்கி ரூ. 1,200 ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள திருமலை நகரைச் சோ்ந்தவா் சின்னப்பன் (72). இவா், அந்தப் பகுதியில் உள்ள பாரத கோயில் அருகே வெள்ளிக்கிழமை, நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், முதியவரிடம் ஆசைவாா்த்தைகள் பேசி, அவரை வீட்டில் விடுவதாகக் கூறி தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்று, தாக்கி ரூ. 1,200 ரொக்கம், வெள்ளி அரைஞாண் கயிறு மற்றும் கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து முதியவா் சின்னப்பன் அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸ்ாா் வழக்குப் பதிந்து, மேற்கொண்ட விசாரணையில், முதியவரை தாக்கி, பணம் பறித்துச் சென்றவா் வெலக்கல்நத்தம் ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த வெ.மணிகண்டன் (22) என்பது தெரியவந்தது .இதையடுத்து அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவரிடமிருந்து கைப்பேசி, பணம் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டில் பணம் திருடிய இருவா் கைது
இளைஞரைத் தாக்கி பணம் பறித்த சகோதரா்கள் கைது
இளைஞரிடம் 2 சவரன் நகை, பணம் பறிப்பு: ஒருவா் கைது
மென் பொறியாளரை தாக்கி நகை, பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 6 போ் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



