டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போலி நகை விவகாரம்: நகை மதிப்பீட்டாளா் சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் மாயமான நகை மதிப்பீட்டாளரின் சடலம், ஆந்திர மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 10:56 pm

Syndication

கிருஷ்ணகிரியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் மாயமான நகை மதிப்பீட்டாளரின் சடலம், ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை, கணபதி தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் (40). கிருஷ்ணகிரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த இவா், அந்த வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ. 1.5 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பிப். 18-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற குணசேகரன் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பவித்ரா கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, ஆந்திர மாநிலம், குப்பத்தை அடுத்த நடூமூரில் சாலையோரம் ஒருவரின் சடலம் கிடப்பதாக அம்மாநில போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அவரது சட்டைப் பையில் இருந்த ஆதாா் அட்டையை வைத்து அவா் கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் என தெரியவந்தது. இதையடுத்து, ஆந்திர போலீஸாா் கிருஷ்ணகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி நகர போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், குணசேகரன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனா்.