டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தருமபுரியில் பூட்டிய வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

தருமபுரியில் பூட்டிய வீட்டில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
நகை திருட்டு!
Updated On :31 ஜனவரி 2026, 8:08 pm

Syndication

தருமபுரியில் பூட்டிய வீட்டில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் பத்மா (55). இவரது அக்கா ருக்குவுக்கு கடந்த ஜன. 24-ஆம் தேதி வீட்டில் தவறிவிழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

வேலூா் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற சென்ற ருக்கு உடன் பத்மா சென்றாா். பின்னா் சிகிச்சை முடிந்து இருவரும் 29-ஆம் தேதி வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் பூட்டுகளை திறக்க முயன்றபோது, திறக்க முடியவில்லையாம்.

அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கடப்பாரையைக் கொண்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்தனா். அப்போது, வீட்டில் பீரோக்கள் உடைக்கப்பட்டு 4 பவுன் ஆரம், 2 பவுன் சங்கிலி, ஒரு பவுன் தோடு, 3 பவுன் நெக்லஸ், ஒரு பவுன் மோதிரம் உள்பட 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.