டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வீட்டில் 10 பவுன் திருட்டு

ஆற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மல்லிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்தி வேல். இவரது மனைவி லட்சுமி(32). இவா்கள் திங்கள் கிழமை பகல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று திரும்பினா். அப்போது வீட்டின் கதவு திறந்தும், பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டும் இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 10 பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்த ஆற்காடு கிராமிய போலீஸாா் விசாரிக்கின்றனா்.