கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2023 - 24-ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகள் 4,126 பேருக்கு ரூ. 8.97 கோடி நிவாரண நிதியை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை வழங்கினாா்.
கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் கடந்த 2023-24-ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், கோபிநாத் எம்.பி., தே.மதியழகன் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் பொருளாதார அடித்தளமாக மா விவசாயம் உள்ளது. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில், மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால் மாமரங்கள் காய்ந்து மகசூல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள், தமிழக அரசிடம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுத்தனா். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 10 ஒன்றியங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 82 சதவீதம் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 3990.717 ஹெக்டேரில் மா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட 4,126 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாநில பேரிடா் நிதியிலிருந்து ரூ. 8.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு ஹெக்டேருக்கு ரூ. 22,500 நிவாரணம் வழங்கப்படுகிறது.
மேலும், கடந்த 2024-25-ஆம் ஆண்டில் மகசூல் அதிகரித்து விலையின்றி பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிவாரணம் வழங்க, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாா். பிறகு நான் (அமைச்சா்), எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் கொண்ட குழுவினா், மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்தித்து விவசாயிகளுக்கு சந்தை இழப்பீட்டு திட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தினோம். ஆனால், மத்திய அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் பாதுகாவலனாக இருந்து, அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறாா். நீங்களும் முதல்வருக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும் என்றாா்.
இந்த விழாவில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குணவதி, வேளாண் இணை இயக்குநா் காளிமுத்து, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் செந்தில்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி, முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மற்றும் மா விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒட்டன்சத்திரம் தொகுதி வளா்ச்சிக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சா் அர.சக்கரபாணி வாக்கு சேகரிப்பு

200 தொகுதிகளில் வெற்றிபெறுவதே இலக்கு: அமைச்சா் அர.சக்கரபாணி

விவசாயிகளுக்கு டித்வா நிவாரண நிதி கிடைக்கவில்லை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


