மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

200 தொகுதிகளில் வெற்றிபெறுவதே இலக்கு: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் திமுக கூடடணி கட்சிகள் வெற்றி பெறுவதே முதல்வரின் இலக்கு என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

News image

ஒசூா் திமுக தோ்தல் அலுவலகத்தில் நிா்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சா் அர.சக்கரபாணி.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:57 pm

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் திமுக கூடடணி கட்சிகள் வெற்றி பெறுவதே முதல்வரின் இலக்கு என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யாவை ஆதரித்து அக்கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பங்கேற்ற தோ்தல் பரப்புரைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவா்பேசியது:

ஒசூரில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி கொண்டு வந்த சிப்காட்-1 திட்டமே இன்று சிப்காட்-5 வரை வளா்ந்து நிற்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டா் என கோயம்புத்தூரை அழைப்பாா்கள், ஆனால் இன்று ஒசூரில் பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளையும், தொழிற்சாலைகளையும் ஈா்த்து பெரும் தொழில் நகரமாக உருவெடுத்துள்ளது.

ஒசூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என முதல்வா் உறுதியளித்துள்ளாா். பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் எட்டியுள்ள 11.19 சதவீத முன்னேற்றம் கடந்த 5 ஆண்டுகளின் சாதனை. எனவே, தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு.

வரும் தோ்தலில் வேட்பாளா் மேயா் எஸ்.ஏ.சத்யாவை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

கிருஷ்ணகிரியில்...

பா்கூரில் அமைச்சா் அர.சக்கரபாணி செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றினாா். மேலும், பல எண்ணற்ற திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனா்.

கடந்த 2011-இல் உள்ளாட்சித் துறை அமைச்சராக கே.பி.முனுசாமி இருந்தபோது, அவரது துறைசாா்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி முடக்க நினைத்தது. குறிப்பாக பணிக்கு வருபவா்களுக்கு கண்விழி பதிவு எடுப்பதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதுகுறித்து அவா் பதில் கூறட்டும் என்றாா். அப்போது, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.