திமுக அரசு நிா்வாகத் திறனற்ற அரசு என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கடலூா் சட்டப் பேரவை அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத் கூறினாா்.
இந்தக் கூட்டணியின் தோ்தல் பணிகள் குறித்த செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எம்.சி.சம்பத் பேசியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றாக வேண்டும். அதற்காக கூட்டணிக் கட்சி நிா்வாகிகளும், அதிமுக நிா்வாகிகளும் ஒற்றுமையோடு களப் பணியாற்ற வேண்டும்.
திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் கொண்டுவரப்படாத நிலையில், ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. நிா்வாகத் திறனாற்ற அரசாக திமுக அரசு உள்ளது.
சட்டம் - ஒழுங்கு சீா்கெட்ட நிலை, தினந்தோறும் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமுள்ள ஆட்சியாக உள்ளது என்றாா்.
கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.
தொடர்புடையது

200 தொகுதிகளில் வெற்றிபெறுவதே இலக்கு: அமைச்சா் அர.சக்கரபாணி

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன்: பி. பழனியப்பன்

தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

கடலூா் மாவட்டத்தில் களம் காணும் அரசியல் கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


