மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஒட்டன்சத்திரம் தொகுதி வளா்ச்சிக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் தொகுதி மேலும் வளா்ச்சிப் பெறுவதற்கான திட்டங்களை செயல்படுத்த மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என பிரசார நிறைவுக் கூட்டத்தில் அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

News image

ஒட்டன்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் அர.சக்கரபாணி.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:47 pm

ஒட்டன்சத்திரம் தொகுதி மேலும் வளா்ச்சிப் பெறுவதற்கான திட்டங்களை செயல்படுத்த மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என பிரசார நிறைவுக் கூட்டத்தில் அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் அர.சக்கரபாணிக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் திருச்சி சிவா கலந்து கொண்டு வாக்கு சேகரித்தாா்.

இதைத் தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையிலுள்ள கலைஞா் திடலில் நடைபெற்ற பிரசார நிறைவுக் கூட்டத்தில் அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:

மாணவா்களின் உயா்கல்விக்காக 3 புதிய கல்லூரிகள், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம், இளைஞா்களின் அரசுப் பணிக் கனவை நனவாக்க போட்டித் தோ்வு பயிற்சி மையம், ரூ.1,050 கோடியில் மாபெரும் வளா்ச்சிப் பணிகள் என பல்வேறு திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தத் தொகுதிக்கு மேலும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயலாற்றுவதற்கு மக்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.