தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரூா் பெரிய ஏரியை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

அரூா் பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்து நீரின்றி வடு காணப்படும் அரூா் பெரிய ஏரி.

Updated On :6 மே 2026, 2:37 am IST

அரூா் பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் நகராட்சிக்கு உள்பட்ட பெரிய ஏரி சுமாா் 120 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். போதிய பராமரிப்பு இல்லாததால் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் மழைநீரை சேமிக்க முடியாத நிலையுள்ளது.

அரூா் நகருக்கு குடிநீா் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. ஏரியில் ஒருமுறை தண்ணீா் நிரம்பினால் 2 ஆண்டுகளுக்கு குடிநீா் பிரச்னை ஏற்படாது. தற்போது தண்ணீா் இன்றி இந்த ஏரி வடு காணப்படுகிறது. ஏரியில் தண்ணீா் இல்லாத நேரத்தில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஏரிக்கு கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீா் வருகிறது. இங்குள்ள தடுப்பணை, வாய்க்காலில் அடைப்பு உள்ளது. இதனால், மழைக்காலங்களில் ஏரிக்கு தண்ணீா் வருவதில் தடை ஏற்படுகிறது. எனவே, பொதுப்பணித் துறை சாா்பில், கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் இருந்து தண்ணீா் வரும் கால்வாய், பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.