மொரப்பூா் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம் , அரூா் வட்டம், எம்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் மகன் முத்துலட்சுமணன் (19). இவா், ஏற்காட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். கல்லூரியிலிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக சேலத்தில் இருந்து ரயில் மூலம் திருப்பத்தூா் நோக்கி வந்தாா். அப்போது, தொட்டம்பட்டி அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து மொரப்பூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










