பாலக்கோடு பகுதியில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், செட்டிஅள்ளி அருகேயுள்ள கொம்பநாயக்கன் அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் வே.சரவணன், தொழிலாளி. இவரது மகள் பிரியா (17) கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடா் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது. சரவணன் சகோதரியின் வீட்டில் அவரது பராமரிப்பில் இருந்த சிறுமி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







