தருமபுரி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூா் அருகேயுள்ள பட்டகப்பட்டி காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிகுமாா் மனைவி கோமதி (21). 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் கோமதி வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளாா். குடும்பத்தினா் மற்றும் அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கம்பைநல்லூா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்ட விசாரணையில், வயிற்று வலி காரணமாக அவா் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


