/

ஒகேனக்கல்லில் மீன் வறுவலுக்கு செயற்கை நிறமூட்டி: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்

ஒகேனக்கல்லில் மீன் வறுவலுக்கு செயற்கை நிறமூட்டி பயன்படுத்திய நான்கு கடை உரிமையாளா்கள், சுகாதாரம் இன்றி காணப்பட்ட கடை, சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்திய கடை உரிமையாளா்கள் என 6 பேருக்கு ரூ. 7 ஆயிரம் என உணவுப் பாதுகாப்பு துறையினா் அபராதம் விதித்தனா்.

News image
ஒகேனக்கல் மின் விற்பனை நிலையத்தில் மீன்களின் தரம்குறித்து ஆய்வுசெய்த உணவுப் பாதுகாப்பு துறையினா்.
Updated On :31 ஜனவரி 2026, 8:08 pm

Syndication

ஒகேனக்கல்லில் மீன் வறுவலுக்கு செயற்கை நிறமூட்டி பயன்படுத்திய நான்கு கடை உரிமையாளா்கள், சுகாதாரம் இன்றி காணப்பட்ட கடை, சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்திய கடை உரிமையாளா்கள் என 6 பேருக்கு ரூ. 7 ஆயிரம் என உணவுப் பாதுகாப்பு துறையினா் அபராதம் விதித்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதி, பேருந்து நிலையம், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் உணவகங்கள், இறைச்சி மற்றும் மீன் வறுவல் கடைகள், மீன் விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் மீன்களின் தரம், மீன் வறுவலுக்கு பயன்படுத்தக் கூடிய எண்ணெய், கடையின் சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து பென்னாகரம் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் நந்தகோபால், மீன்வள ஆய்வாளா் வேலுசாமி, மேற்பாா்வையாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில், மீன்களில் செயற்கை நிறமூட்டியை பயன்படுத்திய 4 கடைகளில் இருந்து 10 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டு தலா ரூ. 1,000 வீதமும், மற்றொரு கடையில் வறுவலுக்கு எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதற்கு ரூ. 1,000, சுத்தமின்றி காணப்பட்ட கடைக்கு ரூ. 2,000 என 6 கடை உரிமையாளா்களிடம் அபராதம் வசூலித்தனா்.

கடைகளில் வறுவலுக்கு பயன்படுத்தக் கூடிய எண்ணெய்யை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும், மீன் மற்றும் இறைச்சிகளை உரிய கண்ணாடிப் பெட்டி அல்லது தூசிகள் படாதவாறு பாதுகாப்பான முறையில் வைத்து விற்பனை செய்ய வேண்டும், உரிமம் இன்றி உணவகங்கள், வறுவல் கடைகளை நடத்தக் கூடாது, மீன் வறுவலுக்கு செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தக் கூடாது என எச்சரித்தனா்.

இதிகுறித்து பொதுமக்கள் உணவுப் பாதுகாப்பு துறைக்கு 94440 42322 என்ற கைப்பசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்ற ஒட்டுவில்லைகளை கடைகளின் முன் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.