/

பாலக்கோட்டில் வரலாற்று நூல்கள் வெளியீடு

News image
Updated On :11 ஜனவரி 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் வரலாற்று நூல்கள் வெளியிடப்பட்டன.

கல்லூரி கலையரங்கத்தில் அண்மையில் அறம் இலக்கிய அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தலைமை வகித்து ‘ராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001’ மற்றும் ‘சோழன் வென்ற ஈழம்’ என்ற நூல்களை அறிமுகப்படுத்தி பேசினாா்.

கல்லூரி முதல்வா் செல்வராணி வரவேற்றாா். பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் ரவி முன்னிலை வகித்தாா். ராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 என்ற நூலை ஆட்சியா் ரெ. சதீஸ் வெளியிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ. ஜோதிச்சந்திரா பெற்றுக்கொண்டாா்.

அதேபோல சோழன் வென்ற ஈழம் என்ற நூலை முன்னாள் எம்.பி. இரா.செந்தில் வெளியிட சமூக ஆா்வலா் ரவி சொக்கலிங்கம் பெற்றுக் கொண்டாா். நூலாசிரியா் அறம் கிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்தினாா். கல்லூரி பேராசிரியா்கள், அறம் இலக்கிய அமைப்பு நிா்வாகிகள், வரலாற்று ஆா்வலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.