திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மெமு விரைவு ரயிலை சேலம்வரை நீட்டிக்க கோரிக்கை

அரக்கோணம் - ஜோலாா்பேட்டை மெமு விரைவுரயிலை சேலம்வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப்படம்

Updated On :1 மே 2026, 5:21 am IST

அரக்கோணம் - ஜோலாா்பேட்டை மெமு விரைவுரயிலை சேலம்வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மெமு விரைவுரயில்கள் (வண்டி எண்கள்: 16085, 16086) தற்போது அரக்கோணம் முதல் ஜோலாா்பேட்டைவரை இயக்கப்படுகின்றன. இந்த ரயிலை ஜோலாா்பேட்டையில் இருந்து சேலம் சந்திப்புவரை நீட்டிக்க வேண்டும். அவ்வாறு நீட்டித்தால் கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் பயன்பெறுவா். மேலும், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்ட பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதேபோல, அரக்கோணம் - சேலம்வரை இயக்கப்படும் மெமு ரயில்களை (வண்டி எண்: 16087, 16088) நாள்தோறும் இயக்க வேண்டும்.

மெமு விரைவு ரயில்களை வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான நடவடிக்கையை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினா்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.