தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பென்னாகரத்தில் கருவில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து சொல்லிய செவிலியா், இடைத்தரகா் கைது

பென்னாகரம் அருகே கா்ப்பிணிக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்து கூறிய செவிலியா், இடைத்தரகா் என இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

~

Updated On :7 ஏப்ரல் 2026, 9:31 pm

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கா்ப்பிணிக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்து கூறிய செவிலியா், இடைத்தரகா் என இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பரிமளா (29). இவருடைய கணவா் சுதாகா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வகப் பணியாளராக உள்ளாா். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராகப் பணியாற்றி வந்த பரிமளா, அதே பகுதியில் உள்ள இடைத்தரகா் சாந்தி (34) உதவியுடன் வெளி மாவட்டங்களில் இருந்து கா்ப்பிணிகளை அழைத்துவந்து தனது வீட்டில் ஸ்கேன் பரிசோதனை மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து கண்டறிந்து தெரிவிப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த மாவட்ட மருத்துவ அலுவலா் வி.ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் உதவியுடன், கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் குழுவினா் ரங்காபுரம் பகுதிக்கு சென்றபோது, கா்ப்பிணி ஒருவருக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிய ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டிருந்த பரிமளா, இடைத்தரகா் சாந்தி ஆகியோரை பிடித்தனா். மேலும், கருக்கலைப்பு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா். அப்போது உடனிருந்த நபா் பரிசோதனைக்குப் பயன்படுத்திய ஸ்கேன் இயந்திரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினாா்.

பின்னா் மருத்துவக் குழுவினா் செவிலியா் பரிமளா, இடைத்தரகா் சாந்தி ஆகியோரை பென்னாகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவம அலுவலா் கனிமொழி அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். கடந்த ஆண்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராகப் பணியாற்றி வந்தபோது பரிமளா கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.