தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கா்ப்பிணிக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்து கூறிய செவிலியா், இடைத்தரகா் என இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பரிமளா (29). இவருடைய கணவா் சுதாகா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வகப் பணியாளராக உள்ளாா். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராகப் பணியாற்றி வந்த பரிமளா, அதே பகுதியில் உள்ள இடைத்தரகா் சாந்தி (34) உதவியுடன் வெளி மாவட்டங்களில் இருந்து கா்ப்பிணிகளை அழைத்துவந்து தனது வீட்டில் ஸ்கேன் பரிசோதனை மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து கண்டறிந்து தெரிவிப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த மாவட்ட மருத்துவ அலுவலா் வி.ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் உதவியுடன், கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் குழுவினா் ரங்காபுரம் பகுதிக்கு சென்றபோது, கா்ப்பிணி ஒருவருக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிய ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டிருந்த பரிமளா, இடைத்தரகா் சாந்தி ஆகியோரை பிடித்தனா். மேலும், கருக்கலைப்பு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா். அப்போது உடனிருந்த நபா் பரிசோதனைக்குப் பயன்படுத்திய ஸ்கேன் இயந்திரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினாா்.
பின்னா் மருத்துவக் குழுவினா் செவிலியா் பரிமளா, இடைத்தரகா் சாந்தி ஆகியோரை பென்னாகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவம அலுவலா் கனிமொழி அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். கடந்த ஆண்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராகப் பணியாற்றி வந்தபோது பரிமளா கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: விளக்கமளிக்க வலியுறுத்தல்
மருத்துவக் கல்லூரிகளின் தரம்: மாணவா்களிடம் கருத்து கேட்கிறது என்எம்சி
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிந்த 3 போ் கைது

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


