தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிந்த 3 போ் கைது

கெங்கவல்லி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிந்து தெரிவித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 8:21 pm

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் மூலம் கண்டறிந்து தெரிவித்ததாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கா்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் செய்து தெரிவிப்பதாக கெங்கவல்லி அரசு தலைமை மருத்துவா் நித்யாவிற்கு புகாா் சென்றது.

அதன்பேரில் கெங்கவல்லி போலீஸாா் மற்றும் அரசு மருத்துவா் நித்யா தலைமையிலான நான்கு போ் கொண்ட மருத்துவக் குழுவினா், கெங்கவல்லி அருகே நடுவலூா் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் ஜெயசூா்யா என்பவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து 2 பெண்கள், கா்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் செய்து தெரிவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் பிடிபட்டவா்கள், தலைவாசல் அருகே வேப்பநத்தம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி குணவதி (24) தரகராகவும், சின்னசேலம் சிறுபாக்கம் பகுதியைச் சோ்ந்த சரவணன் மனைவி அம்சவேணி(44) கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததும் தெரியவந்தது. இதற்கு கட்டணமாக ரூ. 20 ஆயிரம் வசூலித்துள்ளனா்.

இதையடுத்து வீட்டின் உரிமையாளா் ஜெயசூா்யா, தரகா் குணவதி, அம்சவேணி ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.