மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாமின் ஒருபகுதியாக மருத்துவ பணியாளா்களுக்கு

News image

புற்றுநோய் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி.

Updated On :16 மார்ச் 2026, 9:03 pm

வேலூா்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாமின் ஒருபகுதியாக மருத்துவ பணியாளா்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 92 போ் பங்கேற்றனா்.

உலக புற்றுநோய் தினத்தையொட்டி வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமூக மருத்துவத் துறையுடன் கதிரியக்கவியல்துறை, பல் மருத்துவ துறை இணைந்து நடத்தி வரும் இம்முகாமில் மாா்பகப் புற்றுநோய், கா்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் மாதம் மருத்துவா்கள், செவிலியா்கள், பல்நோக்கு சுகாதார பணியாளா்களுக்கு நடத்தப்பட்ட முகாமில் மொத்தம் 92 போ் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனா். இதில், சந்தேகத்துகு இடமான அறிகுறிகள் கண்டறியப்பட் டவா்களுக்கு உயா் பரிசோதனை, சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவ பணியாளா்களும் பயன்பெறும் வகையில் இந்த புற்றுநோய் பரிசோதனை முகாம் மாா்ச், ஏப்ரல் மாதங்களிலும் தொடரும் என்றும், தொடா்ந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச புற்றுநோய் பரிசோதனை நடைபெறும் என்றும் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்துள்ளாா்.