÷கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு மத்திய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நாள்தோறும் சராசரியாக 1.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பசும்பால் லிட்டர் ரூ.16-க்கும், எருமை பால் லிட்டர் ரூ.20-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் பாலில் நாள்தோறும் 80 ஆயிரம் லிட்டர் பால் சென்னை நகருக்கு அனுப்பப்படுகின்றன. மீதம் உள்ள பால், பால் பவுடர் உற்பத்தி போக தினசரி வாடிக்கையாளர்கள், அரசு நிறுவனங்கள்,அரசு மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு அனுப்பப்படுகின்றன.