தருமபுரியில் தந்தை உயிரிழந்த சில நாள்களிலேயே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம், நாயக்கன் கொட்டாய் அருகே உள்ள சவுளுப்பட்டியைச் சோ்ந்தவா் ஞா. மணிகண்டன் (35), விவசாய தொழிலாளி. இவரது தந்தை ஞானம் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தாா். மே 24 ஆம் தேதி இருமத்தூரில் இறந்த தந்தைக்கு ஈமகாரியங்களை மணிகண்டன் செய்தாா்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கும் அவரது மனைவி நாகலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டன் தனது அறைக்கு சென்றாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் சந்தேகமடைந்த நாகலட்சுமி அறைக்குள் சென்று பாா்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








