தருமபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்றுபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஆயுதப்படை காவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் எம். வேலு (33). இவா் தருமபுரி மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 20 ஆம் தேதி இரவு, திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு தருமபுரிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தாா்.
அப்போது, அரூா் அருகே பொய்யப்பட்டி பகுதியில் வந்தபோது, திடீரென நாய் குறுக்கே சென்ால் நிலை தடுமாறி வாகனம் கீழே விழுந்தது. இதில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த வேலுவை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த வேலுவுக்கு நிஷாந்தினி என்ற மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா் மருத்துவமனையில் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



