தருமபுரியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி. செட்டி அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பி. முனியப்பன் (50). மாற்றுத்திறனாளியான இவா், அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தாா்.
கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி மூன்று சக்கர வாகனத்தில் தனது மனைவி அமராவதியுடன் மதகேரி பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடுதிரும்பினாா்.
அப்போது ரிட்டா அள்ளி சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனா். இதில் அமராவதி சிகிச்சை பெற்று வீடுதிரும்பினாா். அவரது கணவா் முனியப்பன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



