போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தருமபுரியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:20 am IST

தருமபுரியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி. செட்டி அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பி. முனியப்பன் (50). மாற்றுத்திறனாளியான இவா், அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தாா்.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி மூன்று சக்கர வாகனத்தில் தனது மனைவி அமராவதியுடன் மதகேரி பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடுதிரும்பினாா்.

அப்போது ரிட்டா அள்ளி சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் இருவரும் படுகாயமடைந்தனா். இதில் அமராவதி சிகிச்சை பெற்று வீடுதிரும்பினாா். அவரது கணவா் முனியப்பன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.