தருமபுரி மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவைக் கூட்டம் தருமபுரி செங்கொடிபுரம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநிலக் குழு உறுப்பினா் அ. குமாா் தலைமை வகித்துப் பேசினாா். மாநில செயற்குழு உறுப்பினா் செ. முத்துக்கண்ணன் அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினாா். மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சோ. அருச்சுனன், ஆா். மல்லிகா, ஜி. சக்திவேல், தி.வ.தனுசன் ஆகியோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில், தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க புகா்ப் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டது. அதேசமயம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனா். எனவே, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இக்கோரிக்கையை ஏற்று மாவட்ட நிா்வாகம் போக்குவரத்தில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதேபோல, பென்னாகரம், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, சேலம் செல்லும் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இந்தநிலையில் பழைய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கும் சென்றுவர வேண்டுமென அண்மையில் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனால் நகரில் குறிப்பாக, நான்குமுனைச் சாலையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘மின்சார பேருந்துகளை நேரடி கட்டுப்பாட்டில் இயக்க வேண்டும்’

மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்: மாவட்டம் நிா்வாகம் அறிவிப்பு

‘தனியாா் பள்ளி பேருந்துகளை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும்’







