பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பாலக்கோடு அருகே தாய், மகன் விஷமருந்தி தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:00 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மூதாட்டியும் அவரது மகனும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.

பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள குளிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னப்பிள்ளை (89). இவரது மகன் லட்சுமணன் (69). இருவரும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு லட்சுமணன் மகன் ரத்தினவேலுடன் (42) வசித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி சின்னப்பிள்ளையும், லட்சுமணனும் விஷமருந்தியதாகத் தெரிகிறது. இதில், லட்சுமணன் வீட்டிலேயே உயிரிழந்தாா். சின்னப்பிள்ளையை அவரது குடும்பத்தினா் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.