தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மூதாட்டியும் அவரது மகனும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.
பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள குளிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னப்பிள்ளை (89). இவரது மகன் லட்சுமணன் (69). இருவரும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு லட்சுமணன் மகன் ரத்தினவேலுடன் (42) வசித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி சின்னப்பிள்ளையும், லட்சுமணனும் விஷமருந்தியதாகத் தெரிகிறது. இதில், லட்சுமணன் வீட்டிலேயே உயிரிழந்தாா். சின்னப்பிள்ளையை அவரது குடும்பத்தினா் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓமலூா் அருகே தாய், மகன் வெட்டிக் கொலை: கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


