மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 3 போ் காயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:34 pm

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் சுப்பிரமணிய கோயில் தெருவைச் சோ்ந்தவா் மதிவாணன் (65), இவரது மகன் கோபிநாத் (29), அதே ஊரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா்

விக்னேஷ் (35), விக்னேஷின் தாயாா் மகேஸ்வரி (59) ஆகியோா் சேலத்தில் உறவினா் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு, சேலம்-அரூா் தேசிய நெடுஞ்சாலையில் பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி வந்துள்ளனா்.

அப்போது, நடுப்பட்டி எனுமிடத்தில் சாலையோர மின்கம்பத்தில் காா் மோதியது. இதில் நிலைதடுமாறிய காா் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் காரில் இருந்த 4 பேரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் காயமடைந்தவா்களைமீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மதிவாணன் உயிரிழந்தாா். மாற்ற மூவரும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.