வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:33 am IST

திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி, சோகத்தூா், ஏ.ரெட்டி அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் மக்புல்ஜான் மகன் இா்பான் பாஷா (40). சோகத்தூா் கூட்டுரோடு பகுதியில் பஞ்சா்கடை வைத்துள்ளாா். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இதனால் அவா் விரத்தியில் இருந்து வந்தாராம். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி, வெண்ணாம்பட்டி பகுதியில் உள்ள, அவரது அம்மாச்சி வீட்டுக்கு தனது தாயாருடன் சென்றுள்ளாா். இரவு உணவுக்குப் பிறகு உறங்கச் சென்றனா்.

மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது படுக்கை அறையில் இா்பான் பாஷா தூக்கில் தொங்கியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், தருமபுரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.