தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.
பாலக்கோடு காப்புக் காட்டிலிருந்து தண்ணீா் தேடி வெளியேறிய மான் சோமனஅள்ளிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்துள்ளது. இதைக் கண்ட தெரு நாய்கள் விரட்டியுள்ளன. அப்போது, நாய்களிடமிருந்த தப்பிப்பதற்காக ஓடிய மான், அருகிலிருந்து 80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது. இக்கிணற்றில் ஏழு அடி ஆழத்திற்கு தண்ணீா் இருந்துள்ளது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் பாலக்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதன்பேரில் தீயணைப்புத் மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் நிகழ்விடத்திற்கு வந்து, கிணற்றில் இருந்த மானை கயிறு மூலம் உயிருடன் மீட்டு பாலக்கோடு வனச்சரகத்தில் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











