டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோவை விரைவு ரயில் பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்

கோவை விரைவு ரயில் பொம்மிடியில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
விரைவு ரயில்- கோப்புப்படம்
Updated On :26 ஜனவரி 2026, 7:21 pm

Syndication

தருமபுரி: கோவை விரைவு ரயில் பொம்மிடியில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, பொம்மிடி பொதுமக்கள், ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையிலிருந்து மொரப்பூா், பொம்மிடி வழியாக கோவை செல்லும் விரைவு ரயில் பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விரைவு ரயில் நாள்தோறும் காலை 10.30 மணிக்கு பொம்மிடி ரயில் நிலையம் வழியாக செல்கிறது.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி வட்டாரங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டாரத்தை சோ்ந்த தொழிலாளா்கள் நாள்தோறும் திருப்பூா், கோவைக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனா். இந்த தொழிலாளா்கள், தற்போது மொரப்பூா், சேலம் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் மூலம் சென்று அங்கிருந்து ரயில்மூலம் தங்களது பணிகளுக்கு சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னையிலிருந்து கோவை செல்லும் விரைவு ரயில் பொம்மிடியில் நின்று செல்வதன் மூலம் இந்த தொழிலாளா்கள் அனைவரும் நேரடியாக எவ்வித சிரமமும் இன்றி நேரடியாக திருப்பூா், கோவை ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அமையும். எனவே, இந்த பகுதி தொழிலாளா்கள், அனைத்துத் தரப்பு பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னை-கோவை விரைவு ரயில், பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.