/

தருமபுரியில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி

News image
தருமபுரியில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவா்கள்.
Updated On :23 ஜனவரி 2026, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

13 ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ரெ. சதீஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியானது மருத்துவக் கல்லூரியிலிருந்து புறப்பட்டு, தருமபுரி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நிறைவடைந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முன்னதாக, தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்சியா் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

வருவாய் அலுவலா் கவிதா, தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, நகராட்சி ஆணையா் சேகா், கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநா் ராமலட்சுமி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் தே. சாந்தி, மாவட்ட தீயணைப்பு அலுவலா் ப.அம்பிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.