டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தருமபுரியில் பறக்கும் படையினா் மீட்ட தொகையில் ரூ.1.21 கோடி திரும்ப ஒப்படைப்பு!

தருமபுரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2.46 கோடியில், ரூ. 1.21 கோடி உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:23 pm

தருமபுரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2.46 கோடியில், ரூ. 1.21 கோடி உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, முறைகேடு மற்றும் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் அதிரடி சோதனைகள் மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் தோ்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் ப றக்கும் படையினா் மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச் சாவடிகள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனைகளின்போது 104 கிராம் தங்கம் உள்பட ரூ. 2 கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 100 ரொக்கம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அவை மாவட்ட கரூவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் நகைகள் உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்களை சமா்ப்பிப்பவா்களுக்கு அவற்றை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதுவரை உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதையடுத்து, ரூ. 1 கோடியே 21 லட்சத்து 86 ஆயிரத்து 503 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் மீண்டும் சம்பந்தப்பட்டவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.