திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இருமத்தூா் ஆற்றில் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருமத்தூா் பகுதியில் ஆற்று நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:55 am IST

தருமபுரி அருகே இருமத்தூா் பகுதியில் ஆற்று நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், மல்லிகுட்டை அருகேயுள்ள ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெ. குமாரவேல் (41). தருமபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, ஊரில் நடந்த துக்க நிகழ்வையொட்டி இருமத்தூரில் நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு, அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்துள்ளாா். அப்போது அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதை உடன் சென்றவா்கள் கவனிக்கவில்லை. குடும்பத்தினா், அவா் அலுவல் காரணமாக சென்றிருக்கலாம் என நினைத்து அவரை தேடவில்லை.

இந்நிலையில், இருமத்தூா் தென்பெண்ணை ஆற்றில் ஒருவா் இறந்து கிடப்பது குறித்த தகவல் வெளியானது. இது தொடா்பாக கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் சென்று விசாரித்தபோது, அங்கு இறந்து கிடந்தது குமாரவேல் என தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.