சுதந்திரப் போராட்டத்தின்போது சிறையிலிருந்து விடுதலையான சுப்பிரமணிய சிவா தனது சொந்த ஊராள வத்தலகுண்டுக்கு செல்லாமல், சுதந்தா போராட்ட தியாகி தீர்த்தகிரியாரின் அன்பால் ஈர்க்கப்பட்டு தருமபுரிக்கு வந்தார். பாப்பாரப்பட்டியில் சிவா ஆசிரமம் அமைக்க, தியாகி சின்னமுத்து முதலியார் துணையோடு தீர்த்தகிரியார் முன்னின்று உதவினார்.
சிவாவுக்கு தொழுநோய் முற்றிய நிலையில், அவருக்குப் பணிவிடை செய்ததில் தீர்த்தகிரியாரின் பங்கு மகத்தானது 1925 இல் சுப்பிரமணிய சிவா மறைந்தபோது, அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து, பாப்பாரப்பட்டியில் அவகுக்கு நினைவிடமும் அமைத்தார் தீர்த்தகிரியார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தியாகிகளுக்குப் பதவிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. அன்றைய முதலமைச்சர் காமராஜர், தீர்த்தகிரியாரின் தியாகத்தை அறிந்தவர் என்பதால், அவரை நேரில் சந்தித்து, தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால், தீர்த்தகிரியார் அந்த வாய்ப்பை மிக நாசுக்காக மறுத்து விட்டார். எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை. என் நாடு விடுதலை அடைய வேண்டும் என்று விரும்பினேன். அது நடந்துவிட்டது. அதுவே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு என்று கூறிவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமுறைகளைக் கடந்த குடும்ப நட்புக்காக பிரசாரம்!

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!

பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

பாப்பாரப்பட்டியில் பூட்டிகிடக்கும் கழிப்பறை: பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


