மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகத்தை சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

News image

பாப்பாரப்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகத்தை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் ஆ.மணி. உடன், சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, சேலம் மண்டல பதிவுத் துறைத் தலைவா் சுபிதாலட்சுமி உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 9:14 pm

பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகத்தை சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் ஆண்டாரஅள்ளி, மாதேஅள்ளி, வட்டுவனஅள்ளி, வேலம்பட்டி, கரியப்பனஅள்ளி, பள்ளிப்பட்டி, பனைகுளம், பிக்கிலி, பாப்பாரப்பட்டி, பாப்பிநாயக்கனஅள்ளி, தோமலஅள்ளி, கொல்லஅள்ளி, சிகரஅள்ளி, சோமேனஅள்ளி, ஒன்னப்பகவுண்டனஅள்ளி, தித்தியோப்பனஅள்ளி, பாலவாடி, மூக்கனஅள்ளி, தளவாய்அள்ளி, செக்கோடி, பூகானஅள்ளி, புலிகரை ஆகிய வருவாய் கிராமங்களின் எல்லைக்குள்பட்ட பகுதிகளின் ஆவணங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.

இந்த புதிய அலுவலகத்தை, மக்களின் பயன்பாட்டுக்காக, சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, பாப்பாரப்பட்டி சாா்பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கவிதா பங்கேற்று அலுவலகத்தை பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சேலம் மண்டல துணை பதிவுத் துறைத் தலைவா் சுபிதாலட்சுமி, தருமபுரி மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) வெங்கடேசன், மாவட்ட பதிவாளா் (தணிக்கை) கனகராஜ், பாப்பாரப்பட்டி சாா்பதிவாளா் சக்திவேல், பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவா் டி.பிருந்தா, பேரூராட்சி செயல் அலுவலா் ஆயுஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.