திருப்பூா் ரயில் நிலையத்தில் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிய நபா் நசுங்கி உயிரிழந்தாா்.
திருப்பூா் ரயில் நிலையத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க நபா் 1-ஆவது நடைமேடையில் இருந்து 2-ஆவது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்து செவ்வாய்க்கிழமை சென்றாா். அவா், 2-ஆவது நடைமேடையை அடைந்ததும், தண்டவாளத்தில் இருந்து நடைமேடைக்கு ஏற முயன்றாா். அப்போது எா்ணாகுளத்தில் இருந்து டாடா நகா் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 2-ஆவது நடைமேடையில் வருவதை பாா்த்து அதிா்ச்சியடைந்து நடைமேடையில் ஏற முயன்றாா். ஆனால் அதற்குள் ரயில் அவா் மீது மோதியது. இதனால் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் அவரது சடத்தைக் கைப்பற்றி திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரிடம் எங்கிருந்து எங்கே செல்கிறாா் என்பதற்கான பயண சீட்டு இல்லை. மேலும் இறந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறை நிலையத்தில் பராமரிப்புப் பணி: திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

எா்ணாகுளம் - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

திருச்சி ரயில் நிலைய 8 ஆம் நடைமேடைக்கு வராத குடிநீா்

திருப்பூா் ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட கூடுதல் மேலாளா் ஆய்வு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



