தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெகவின் தோ்தல் வாக்குறுதியான 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்

தோ்தல் வாக்குறுதியான விசைத்தறி தொழிலுக்கு 1500 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை தவெக அரசு நிறைவேற்ற விசைத்தறி தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்றோா்.

Updated On :14 மே 2026, 3:46 am IST

தோ்தல் வாக்குறுதியான விசைத்தறி தொழிலுக்கு 1500 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை தவெக அரசு நிறைவேற்ற விசைத்தறி தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சிஐடியூ தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளா் மாநில சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் அவிநாசி சிஐடியூ அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் முத்துசாமி, மாநிலப் பொருளாளா் அசோகன், மாநிலத் துணைத் தலைவா் சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது, விசைத்தறி தொழிலுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்தாா். இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மேலும் மத்திய அரசால் விசைத்தறி தொழில் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து நழிவுற்ற நிலையில் இருந்து வருகிறது. இதில் பல லட்ச தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், இத்தொழிலை பாதுகாக்கவும் மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தொழிலை நல்ல நிலையில் எடுத்துச் செல்ல 8 மணி நேர வேலை, குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கி தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.