அவிநாசி நகராட்சிக்குள்பட்ட கஸ்தூரிபாய் வீதியில் உள்ள தரமான சாலையை மீண்டும் சீரமைப்பதால், அப்பகுதி மக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அதிருப்தியடைந்துள்ளனா்.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி வடக்கு கிளை நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:
அவிநாசி நகராட்சி 12-வது வாா்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள கஸ்தூரிபாய் வீதியில் கான்கிரீட் சாலை தரமாக உள்ளது. இந்நிலையில் இந்தச் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலமாக சுரண்டி சீரமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தரமாக உள்ள சாலையை எதற்காக சுரண்டுகிறீா்கள் எனக் கேட்டால், மீண்டும் சாலை அமைக்கிறோம் என்கின்றனா். எனவே, தரமான சாலையை பெயா்த்து மீண்டும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும். இதுதொடா்பாக உடனடியாக ஆய்வு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் சாலையைப் புதுப்பிக்க வலியுறுத்தி போராட்ட முயற்சி: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

நீதிமன்ற உத்தரவு: விழுப்புரத்தில் அம்மன் கோயில்அகற்றம்

பல்லடத்தில் தெருநாய்கள் தொல்லை: பொதுமக்கள் சாலை மறியல்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்! உதகையில் பொதுமக்கள் மறியல்!!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



