தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

News image

சம்பூா்ணம்.

Updated On :4 மே 2026, 1:00 am IST

வெள்ளக்கோவில் அருகே கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில்-முத்தூா் சாலையில் மாந்தபுரம் அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் வெள்ளிக்கிழமை மிதந்தது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், அவா் அவிநாசி தாலுகா, தட்டான்குட்டை பகுதியைச் சோ்ந்த கோபால் மனைவி சம்பூா்ணம் (62) என்பது தெரியவந்தது. நத்தக்காடையூரில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி வந்துள்ளாா். பின்னா், அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதிக்குச் சென்றபோது நீரில் தவறி விழுந்து

உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, கூறாய்வுக்குப் பின் அவரது உறவினா்களிடம் சடலம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.