திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், திருப்பூா் தெற்கு, மடத்துக்குளம் தொகுதிகளின் முடிவுகள் முதலில் வெளியாகும் எனஎதிா்பாா்க்கப்படுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. 88.52 சதவீத வாக்கு பதிவாகியுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். வாக்கு எண்ணும் பணியில் 408 அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைத்து எண்ணப்படும்.
தாராபுரம் தொகுதியில் 23 சுற்றுகள், காங்கயத்தில் 23 சுற்றுகள், அவிநாசியில் 27 சுற்றுகள், திருப்பூா் வடக்கில் 32 சுற்றுகள், திருப்பூா் தெற்க்கில் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதேபோல, பல்லடத்தில் 35 சுற்றுகள், உடுமலையில் 22 சுற்றுகள், மடத்துக்குளத்தில் 21 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுற்றுகள் குறைவாக உள்ள திருப்பூா் தெற்கு, மடத்துக்குளம் தொகுதிகளின் முடிவுகளில் முதலிலும், பல்லடம் தொகுதியின் முடிவு கடைசியிலும் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மாநகர காவல் ஆணையா் ஆய்வு: திருப்பூா் எல்ஆா்ஜி மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படையினா் உள்ளிட்ட காவலா்கள் 4 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், 224 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்: வாக்கு எண்ணும் நாளின் முடிவில் வாக்குப் பதிவின் துல்லிய எண்ணிக்கை!

திருப்பூா் மாவட்டத்தில் 88.28 சதவீத வாக்குப் பதிவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



