/

முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது

முத்தூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 மே 2026, 6:30 am IST

முத்தூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் முத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது சுப்பிரமணியபுரம் அருகே மதுபானம் விற்றுக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் (45) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 180 மிலி அளவுடைய 32 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.