மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

News image

திருப்பதி

Updated On :29 மார்ச் 2026, 8:22 pm

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நவாப்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி (49). இவா், கடந்த பல ஆண்டுகளாக வெள்ளக்கோவில் அருகே முத்தூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து, தனியாா் நூற்பாலைக்கு வேலைக்குச் சென்று வந்தாா்.

கடந்த 22-ஆம் தேதி முத்தூா்-கொடுமுடி சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி அங்கிருந்த வேகத்தடையில் விழுந்து படுகாயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மலா்கொடி, மகள் லாவண்யா, மகன் ஜீவானந்தம் ஆகியோா் உள்ளனா்.

இதுதொடா்பாக வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.