லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 போ் கைது

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 பேரை பல்லடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 11:55 pm

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 பேரை பல்லடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடத்தில் இருந்து கா்நாடக மாநிலம், மைசூருக்கு கறிக்கோழிகளை ஏற்றிச் சென்ற வேன், அங்கு கறிக்கோழிகளை இறக்கிவைத்துவிட்டு பல்லடத்துக்கு வெள்ளிக்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தது.

பல்லடம் பகுதியில் வந்தபோது அந்த வேனை பல்லடம் போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது வேனில் மாற்று டயா் மற்றும் வேன் முன்புற கதவுகளில் குட்கா மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து வேனில் இருந்த பல்லடம், அம்மாபாளையத்தை சோ்ந்த சுரேஷ்(39), கணபதிபாளையத்தை சோ்ந்த பிரகாஷ் (36) ஆகியோரை பல்லடம் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 21 கிலோ குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.