பாங்காக்கில் இருந்து பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையம் வழியாக போதைப் பொருள் கடத்தி வந்த 6 பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா்.
பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா விமான நிலையத்தில் மாா்ச் 29, 30-ஆம் தேதிகளில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்த 6 பேரை கைதுசெய்தனா்.
பாங்காக்கில் இருந்து வந்த 5 பயணிகள் கொண்டுவந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ. 6.20 கோடி மதிப்புள்ள 17.45 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல, மற்றொரு சோதனையில் ரூ. 4.02 கோடி மதிப்புள்ள 11.5 கிலோ போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடா்பாக வழக்குப் பதிந்த சுங்கவரித் துறை அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து 6 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

போலியான அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கிய காவலா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

