லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போலியான அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கிய காவலா் கைது

தில்லி ஷாஹீன் பாக் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலா் அருண் போதைப் பொருள் கடத்தலில் போலியான காவல் துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்கியதாக கைது செய்யப்பட்டாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 மார்ச் 2026, 5:46 pm

தில்லி ஷாஹீன் பாக் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலா் அருண் போதைப் பொருள் கடத்தலில் போலியான காவல் துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்கியதாக கைது செய்யப்பட்டாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுவாக வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல, விசா விண்ணப்பம், குடியேற்ற நடைமுறை மற்றும் தனியாா் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு இந்த காவல் துறை அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தென்கிழக்கு தில்லியில் நடைபெற்ற போதைப் பொருள் கடத்தல் விசாரணையின்போது இந்த மோசடி வெளிவந்தது. குற்றஞ்சாட்டப்ப்டட அருண் 2017-ஆம் ஆண்டு தில்லி காவல்துறையில் பணியில் சோ்ந்தாா். ஹிமாசல பிரதேசம் மண்டி பகுதியைச் சோ்ந்த இவா் துஷாா் என்ற தனது கூட்டாளியுடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு போலி காவல் துறையின் அனுமதிச் சான்றிதழ்களை வழங்கியுள்ளாா்.

இதற்காக ரூ.1000 முதல் ரூ.2000 வரை வசூலித்துள்ளாா். அவரும் அவரது கூட்டாளியும் 6 மாதங்களாக மாதம் ரூ.35,000 வாடகை வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல போலி சான்றிதழ்கள், அதிகாரப்பூா்வ முத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இது தொடா்பாக மோசடி மற்றும் போதைப் பொருள் தொடா்புடைய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சோதனையின்போது உஸ்பெகிஸ்தானைச் சோ்ந்த பெண் ஒருவரும் அவா்களுடன் அந்த வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் அவருக்கு தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.