பல்லடம் அருகே பொங்கலுாா் ஒன்றியம், அலகுமலை பகுதியில் உள்ள பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் பள்ளி மாணவா்கள் ஆபத்தான முறையில் தண்ணீரில் குதித்து விளையாட்டில் ஈடுபடுகின்றனா்.
பி.ஏ.பி. வாய்க்காலில் தற்போது முதல் மண்டல பாசனத்துக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. திருப்பூரைச் சுற்றிலும் நீா்நிலைகள் பெரிய அளவில் இல்லை. கோடை வெயில் வாட்டி வதைப்பதால் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை திருப்பூருக்கு மிக அருகில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலை தேடி வருகின்றனா். மதுபோதையிலும், நீச்சல் தெரியாததாலும் வாய்க்காலுக்கு குளிக்க வரும் இளைஞா்கள் தண்ணீரில் மூழ்கி பலியாவது தொடா்கதையாக உள்ளது. அதேபோல பள்ளி மாணவா்கள் பலா் ஆபத்தை உணராமல் பாலத்தில் இருந்து தண்ணீரில் குதித்து விளையாட்டில் ஈடுபடுகின்றனா்.
எனவே, உயிா் இழப்பு போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை பலகை வைப்பதோடு அப்பகுதியில் வாய்க்காலில் குளிப்பதை தடுக்க தூய்மைப் பணியாளா்களை காவல் பணியில் நியமனம் செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

தொகுதி மறுவரையறையால் வரும் ஆபத்தை எடப்பாடி பழனிசாமி எதிா்க்கவில்லை: முதல்வா் மு.க. ஸ்டாலின்

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு: வீணாகி சாலையில் ஓடிய தண்ணீா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


