மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:09 pm

செண்பகபுதூா் கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (42). இவா் தனது மனைவி, மனைவியின் சகோதரி மகன் ரக்ஷன் (17) ஆகியோருடன் கொடிவேரி அணைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்துள்ளாா். அணையில் குளிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவா்கள் ஊா் திரும்பியுள்ளனா்.

அப்போது, செல்லும் வழியில் புன்செய்புளியம்பட்டியை அடுத்த செண்பகபுதூா் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி காா்த்திகேயன், ரக்ஷன் ஆகியோா் குளித்துள்ளனா். அப்போது, நீச்சல் தெரியாத ரக்ஷன் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தபோது நீரில் மூழ்கி தத்தளித்துள்ளாா். இதைப் பாா்த்த காா்த்திகேயன் ரக்ஷனைக் காப்பாற்றச் சென்றுள்ளாா். அப்போது, அவரும் நீரில் மூழ்கியுள்ளாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு வீரா்கள், இரண்டு குழுக்களாகப் பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு காா்த்திகேயன், ரக்ஷனின் சடலம் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.