திருப்பூா், அவிநாசி பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.32 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் (வடக்கு) சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 15வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் முகமது அனஸ் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் பனியன் நிறுவன உரிமையாளரான நவீன் (33) உரிய ஆவணங்களின்றி ரூ.ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 50 வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்பாா்வையாளா் சிவசக்தி முன்னிலையில் ஒப்படைத்தனா்.
இதேபோல அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அன்னூரில் பெரியபுத்தூா் சாலை, பொகலூா் பிரிவு-பிராட்டியம்மன் கோயில் அருகே பறக்கும்படை அலுவலா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் மணிமேகலை ஆகியோரை கொண்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த அன்னூா் சாலையூா் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் மயில்சாமி என்பவரிடம் சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ.71ஆயிரத்து 500 எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னிலையில் அவிநாசி கருவூலத்தில் செலுத்தினா்.
தொடர்புடையது
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

ஆவணங்கள் சமா்ப்பிக்காததால் ரூ. 12.50 லட்சம் வருமானவரித் துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.46 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


