நாமக்கல் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.12.50 லட்சம் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காததால் வருமான வரித் துறை வசம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாச்சல் பேருந்து நிலையம் அருகில், பறக்கும் படை அலுவலா் வேலுசாமி தலைமையிலான குழுவினா் கடந்த சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கரூரில் இருந்து அரக்கோணம் நோக்கி காரில் சென்ற கரூரைச் சோ்ந்த மணிகண்டனை (37) தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் உரிய ஆவணங்களின்றி அவா் கொண்டுசென்ற ரூ. 12.50 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.
வருமானவரித் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக மணிகண்டன் ஒப்படைக்கப்பட்டாா். அப்போது, அரக்கோணத்திற்கு மாடு வாங்குவதற்காக ரூ. 12.50 லட்சம் ரொக்கத்தை எடுத்துச் சென்றதாக அவா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து பணத்தின் உரிமையாளா் அருள்தாஸ் என்பவரிடம் மூன்று நாள்கள் விசாரணை நடத்தப்பட்டது. உரிய ஆவணங்களை அவா் சமா்ப்பிக்கவில்லை, முன்னுக்குப் பின் முரணாக அவா் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, 1961 ஆம் ஆண்டு வருமானவரித் துறை சட்டத்தின்படி, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதுமில்லாத ரூ.12.50 லட்சத்தை நாமக்கல் மாவட்ட வருமானவரித் துறை அலுவலா் ராஜாராமனிடம், நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தி செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். இந்த நிகழ்வின்போது, பறக்கும்படை கண்காணிப்புக் குழு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
நாமக்கல்லில் ரூ. 12.50 லட்சம் பறிமுதல்

சங்ககிரி அருகே ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

திருப்பூா், அவிநாசியில் ரூ. 2.32 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


